காங்கிரஸ் – பா.ஜ.க இடையே அரசியல் மோதல் தீவிரம்
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு குற்றச்சாட்டைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையேயான அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது.
“சந்தா திருடர்கள் அனைவரும் பா.ஜ.க-வில்தான் உள்ளனர்” எனக் காங்கிரஸ் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளதோடு, போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மறுபுறம், இந்தச் சாட்டுகளை முற்றிலுமாக நிராகரித்துள்ள பா.ஜ.க, மத உணர்வுகளை வைத்து காங்கிரஸ் மலிவான அரசியல் செய்வதாகப் பதிலடி கொடுத்துள்ளது.



