மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இரங்கல்..!
தனித்துவமான படைப்பாற்றலாலும், குடும்பப் பாசம், சமூக மதிப்புகளை வலியுறுத்திய படங்களாலும், பல தலைமுறையினரின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர் பாக்யராஜ். அண்மையில் தனது 50 ஆண்டுகால சாதனை பயணத்தை நிறைவு செய்து, அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில், அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பதிவிட்டுள்ளார்.





