பள்ளி, மருத்துவமனை வளாகங்களில் உள்ள நாய்களை அப்புறப்படுத்த முன்னுரிமை: உயர்நீதிமன்றம் உத்தரவு
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.





