--- --:--:-- --

தமிழ்நாட்டு வழக்கறிஞர் வி.மோகனா உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம்

10

மிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனா உட்பட 5 பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் கோவையைச் சேர்ந்த வி.மோகனா, உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே 12-வது பெண் நீதிபதியாகப் பொறுப்பேற்றுப் பெருமை சேர்த்துள்ளார்.

 

உச்சநீதிமன்றத்தில் கடந்த 2021 ஆகஸ்ட் முதல் ஒரே ஒரு பெண் நீதிபதி (பி.வி.நாகரத்னா) மட்டுமே இருந்து வந்த நிலையில், கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவின் இந்த நியமனம் மூலம் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 2 ஆக உயரவுள்ளது.

 

 

வி.மோகனாவுடன், பஞ்சாப் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு மற்றும் மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோரும் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon