நாமக்கலில் 250 கிட்னி திருட்டு..!
நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 250 கிட்னிகள் திருடப்பட்டதாக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
மேலும், பொதுமக்களின் உடல் நலத்தையே ஆபத்துக்குள்ளாக்கும் இத்தகைய செயல்கள் நடைபெறுவது மிகுந்த கவலைக்குரியது எனவும், இதுபோன்ற சம்பவங்களுக்கு பொறுப்பேற்க வேண்டிய அரசை “கிட்னி திருடும் அரசு” என்று குறிப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.





