சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன்
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அடுத்த வாரம் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போட்டியுடன் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தங்க முலாம் பூச கதவு சட்டங்கள் சென்னை கொண்டுவரப்பட்டபோடு ஜெயராம் பூஜையில் பங்கேற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.





