தூத்துக்குடி இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டிட பணிகள் முடிந்தும் இன்னும் பயன்பாட்டுக்கு வராதது ஏன் என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு பதில் அளிக்கும் வகையில், மத்திய அமைச்சர் மாண்டவியா நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிந்தவுடன் மார்ச் மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.