திருப்பரங்குன்றம்: பாதுகாப்புக்காக சி.ஐ.எஸ்.எஃப்-ஐ அழைத்ததில் தவறு இல்லை – ஐகோர்ட்
உயர் நீதிமன்ற மதுரை கிளை, திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், பாதுகாப்புக்காக சி.ஐ.எஸ்.எஃப்-ஐ அழைத்ததில் தவறு இல்லை என்று தெரிவித்துள்ளது.
மலை உச்சியில் தீபம் ஏற்றவில்லை எனக்கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரிய மதுரை ஆட்சியரின் மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.





