தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வி!
எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள்; உங்களது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது உங்களது பொறுப்பு. இலவசங்களுக்கு கொடுக்க பணம் இருக்கிறது; ஆனால் பணி செய்பவர்களுக்கு கொடுக்க பணம் இல்லையா? நாட்டிலேயே சிறந்த மாநிலம் என்று கூறும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை ஏன் இப்படி இருக்கிறது? தேர்தலுக்கு பணம் செலவழிக்கும் உங்களுக்கு செவிலியர்களுக்கு கொடுக்க பணம் இல்லையா?
தமிழ்நாட்டில் ஒப்பந்த செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக தொகுப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் கேள்வி.






