தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை..!
தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.
தனியார் பள்ளிகள், அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்; அதை மீறினால் உடனே நடவடிக்கை பாயும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.





