பிப்.27க்குள் பள்ளிகளை தேர்வு செய்ய உத்தரவு..!
பேராசிரியர் அன்பழகன் விருதுக்கு சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்ய CEO-க்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளைத் தேர்வு செய்து, வரும் 27ஆம் தேதிக்குள் பட்டியல் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திறனறித் தேர்வுகளில் மாணவர்களின் பங்களிப்பு, தினசரி கற்றல், கற்பித்தல் நிகழ்வுகள் அடிப்படையில் மாவட்டத்திற்கு இரு பள்ளிகள் என மொத்தம் 76 பள்ளிகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.






