கலெக்டர் வீட்டுக்குள்ளேயே புகுந்த மழை நீர்..!
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்கள் திக்குமுக்காடி போயுள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலையில் வேங்கி கால்வாய் நிரம்பி உபரி நீர் வெளியேறியதில், குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
இதில் திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியனின் வீடும் ஒன்று. இந்நிலையில், இன்று காம்பவுண்டு சுவரை உடைத்துக் கொண்டு கலெக்டர் வீட்டுக்குள்ளேயே வெள்ளம் புகுந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




