ரயில்வே தண்டவாளம் தடுப்பில் சிக்கிய யானை..!
கர்நாடகாவில் ரயில்வே தண்டவாளத்தில் சிக்கிய யானையை வனத்துறையினர் மீட்டனர். கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் இரண்டு யானைகள் உணவு தேடி வந்துள்ளன.
இதில் ஒரு யானை ரயில்வை தண்டவாள தடுப்பில் சிக்கிக் கொண்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அங்கிருந்து பொதுமக்களின் உதவியுடன் தண்டவாளம் தடுப்பில் யானையை மீட்டனர். துரிதமாக செயல்பட்டு யானையை மீட்டு வனத்துறைக்கு அங்கிருந்தவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.






