ஊருக்குள் புகுந்த முதலை..அலறிய மக்கள்..!
உத்திர பிரதேச மாநிலம் கிருஷ்ணரின் நல்லன் சோதி கிராமத்திற்குள் முதலை ஒன்று புகுந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். கிராமத்தின் தெருக்களில் முதலை பல மணி நேரமாக சுற்றித்திரிந்தது. இதன் வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்த பின் அங்கு வந்த வனத்துறையினர் முதலையை பிடித்து சென்றனர். ஆற்றில் இருந்து வெளியே வந்த முதலை வழிதவறி கிராமத்திற்கு புகுந்ததாக கூறப்படுகிறது.





