தேர்தலை கண்காணிக்க வாகனத்தில் ஜிபிஆர்எஸ் பொருத்த முடிவு..!
சிவகங்கையில் தேர்தல் பணியை கண்காணிக்க ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு பணிகளை கண்காணிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி நான்கு தொகுதிகளிலும் வாக்கு பதிவு பணிகளை கண்காணிக்கவும் தலா 30 வாகனங்கள் வீதம் மொத்தம் 120 வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இந்த வாகனங்களை கண்காணிக்கும் வகையில் ஒவ்வொரு வாகனத்திலும் gprs கருவி பொருத்தப்பட்டுள்ளது.





