பல நாட்களாக பதுங்கி இருந்த கொலை குற்றவாளி கைது..!
சென்னை பூவிருந்தவல்லி அருகே பதுங்கி இருந்த கொலை குற்றவாளி கைது செய்யப்பட்டார். நாடாளுமன்ற தேர்தலில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க ரவுடிகளை கண்காணிக்கும் பணியை காவல்துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.
அதன்படி திமுக நிர்வாகி செல்வம் கொலை வழக்கின் குற்றவாளியான அப்புவை தனிப்படை காவல்துறை கைது செய்தது. இவர் ஏற்கனவே என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட கூலிப்படை தலைவர் முத்து சரவணன் மற்றும் பிரபல ரவுடி பாம் சரவணன் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.





