மனைவியின் அண்ணனை கொலை செய்த நபர்..!
சேலம் செவ்வாய்பேட்டையில் கடந்த 2ம் தேதி வெள்ளி வியாபாரி சங்கர் என்பவர் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரது தங்கையின் கணவர் சுபாஷ் பாபு என்பவரை கூலிப்படையை ஏவி கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சுபாஷ் பாபுவின் மனைவி கருத்து வேறுபாட்டால், சகோதரர் சங்கர் வீட்டில் தனது மகன்களுடன் வசித்து வந்துள்ளார். மனைவியையும் மகன்களையும் பார்க்காததால் ஷங்கரை கொன்றதாக சுபாஷ் பாபு வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. திமுக பிரமுகர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.





