மகனை தாயே கொலை செய்த அவலம்.. பிரேத பரிசோதனை அறிக்கை..!
தாயே மகனை கொன்ற சம்பவத்தில் மகனை கொன்றது எப்படி என பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கோவாவில் ஒரு ஹோட்டலில் தனது 4 வயது மகனை கொன்று சூட்கேசில் எடுத்துச் சென்று தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் சிஇஓ போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரியவரும் என்று போலீசார் தெரிவித்திருந்தனர். இந்த நேரத்தில் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதில் குழந்தையை தலையணை அல்லது துணியை வைத்து அந்த பெண் கொன்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.





