சாலையில் வெள்ளம்.. பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழும் வாகன ஓட்டிகள்..!
தியாகராய நகர் முத்துலிங்கம் சாலையில் முழங்கால் அளவில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை நீரில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் தவறி விழுகின்றனர்.
விழுகும் பொழுது அவருடைய செல்போனும் தவறு தண்ணீரில் விழுந்து விடுகிறது. எச்சரிக்கை பலகையை அங்கு வைக்க முயற்சி செய்த பொழுதும் நீரோட்டம் இருப்பதன் காரணமாக நீரில் அடித்து செல்லக்கூடிய சூழலில் அங்கு எச்சரிக்கை பலகை வைக்க முடியவில்லை.






