சாலையில் நாட்டு நட்டு விவசாயிகள் போராட்டம்..!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே சாலை வசதி கேட்டு சேரும் சகதியமாக உள்ள சாலையில் நாட்டு நட்டு விவசாயிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்ணமங்கலம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் 50 ஆண்டுகளாக முறையான சாலை வசதிகள் இன்றி அவதி அடைந்து வருவதாக அந்த பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தை முன்னெடுப்பதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.






