டிக் டாக் செயலிக்கு தடை..நேபாள அரசு அதிரடி..!
டிக் டாக் சமூக செயலுக்கு தடை விதித்து நேபாள அரசு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் டிக் டாக் செயலிக்கு ஏற்கனவே தடை விதித்திருக்கிறது.
சமூக நல்லிணக்கத்தில் எதிரொலியான விளைவுகளை சுட்டிக்காட்டி tiktok சமூக ஊடக செயலைக்கு தடை விதித்துள்ளது. நேபாள அரசு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டிக் டாக் செயலி காரணமாக 1,647 வழக்குகள் பதிவாகியுள்ளதாக அமைச்சர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார்.






