ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் தனது சொந்த ஆட்டோவில் 2 1/2 வயது மகனுடன் சென்றுள்ளார். ஆட்டோவின் பின்னால் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தவறி சாலையில் விழுந்துள்ளான்.
அப்பொழுது பின்னால் இருந்து வந்த மினி வேன் சிறுமியின் தலையின் மீது ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி இரத்த வெள்ளத்தில் இருந்த சிறுவன் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மினி வேன் ஓட்டுனரை கைது செய்தனர்.





