பயணியின் பெட்டியில் 47 பாம்புகள்.. ஷாக்கான அதிகாரிகள்..!
மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட 47 பாம்புகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் சென்னையை சேர்ந்த முகமது மொய்தீன் என்பவரது உடைமைகளை சோதனை செய்தபோது அவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 47 பாம்புகள் மற்றும் 2 பள்ளிகளை வான் நுண்ணறிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அவற்றை மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.





