இரவு பகலாக உழைத்து மனைவியை கலெக்டர் ஆக்கிய கணவன்.. ஏமாற்றிய மனைவி..!
இரவு பகலும் உழைத்து கலெக்டர் ஆக்கிய கணவனை மனைவி கழட்டிவிட்டு வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் ஆலோக் என்ற நபர் கலெக்டராக வேண்டும் என்ற தனது மனைவி ஜோதியின் ஆசைக்காக இரவும் பகலும் உழைத்து லோன் வாங்கி படிக்க வைத்துள்ளார். அவரது மனைவி ஒரு வழியாக கலெக்டர் ஆகியுள்ளார்.
இதன் பிறகு அவரிடம் வித்தியாசமாக நடந்து கொண்ட ஜோதி வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதும் தெரிய வந்தது. இதனை அறிந்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நேரத்தில் மனைவி ஜோதி தனது கணவர் அளவுக்கு மீது காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். போலீசாரும் கணவனை கைது செய்துள்ளனர்.





