மல்யுத்த வீரர்கள் பொறுமை காக்க வேண்டும் : மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்
பாலியல் குற்றச்சாட்டில் விசாரணை முடியும் வரை காத்திருங்கள் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். மீறி நடவடிக்கை எடுக்கப்பட்டால் முற்றுகை என விவசாய சங்கங்கள் எச்சரித்த நிலையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
டெல்லி காவல்துறை விசாரணையை முடிக்கும் வரை காத்திருக்குமாறு அனுராக் தாகூர் வேண்டுகோள் விடுத்துள்ளார். விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆதரவாக இருப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





