பயணிகளுடன் அந்தரத்தில் தொங்கிய பஸ்..!
ஆந்திர மாநில தேசிய மலைப்பகுதியில் திரும்புகையில் பிரேக் செயல் இழந்ததால் தெலுங்கானா அரசு பேருந்து விபத்திற்கு உள்ளானது. 30 பயணிகளுடன் சென்ற பேருந்து மலையில் உள்ள வளைவு ஒன்றில் திரும்பும்பொழுது பிரேக் செயல் இழந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் மெதுவாக இயக்கி பக்கவாட்டு சுவற்றின் பேருந்தில் மோதி டிரைவர் நிறுத்தினார். இதனால் மலைக்கு கீழே பேருந்து விழாமல் தவிர்க்கப்பட்டது. பேருந்து முன் சக்கரங்கள் இரண்டும் தொங்கிய நிலையில் இருந்தது. விபத்தில் சிக்கிய பேருந்து கிரேன் மூலம் மீட்கப்பட்டது.






