3 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டால் சலுகை அறிவிப்பு..!
மூன்று முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஆயுள் மற்றும் பொதுக் காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்க சலுகை அளிக்குமாறு காப்பீட்டு நிறுவனங்களை இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதன் மூலம் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா மரணங்கள் தொடர்பான ஆயுள் காப்பீடு தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆயுள் காப்பீடு நிறுவனங்களிடம் கூறியுள்ளது.





