14 வயது சிறுமியை இன்ஸ்டாகிராமில் பழகி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை..!
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டை சேர்ந்த 14 வயது சிறுமியை இன்ஸ்டாகிராமில் பழகி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த திருப்பூரை சேர்ந்த இளைஞர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கூலி தொழிலாளியின் மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 21ஆம் தேதி வீட்டில் இருந்து 5 சவரன் தங்க நகை, 60 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் செல்போனை எடுத்துக் கொண்டு அந்த மாணவி திடீரென மாயமானார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் பிரிவு போலீசார் திருப்பூரை சேர்ந்த பிரபு என்பவரை கைது செய்தனர்.





