நடுக்கடலில் மிதந்த மர்ம பொருளால் பரபரப்பு..!
மெக்சிகோவில் நடுக்கடலில் மிதந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது. மெக்சிகோவில் கடற்கரை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது கடலில் மர்மமான பொருள் ஒன்றும் மிதிந்துள்ளது.
அதைப்பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது கடலில் இருந்த பிளாஸ்டிக் பையில் 1.3 டன் போதைப்பொருள் இருந்தது தெரிய வந்தது. அதனை கைப்பற்றிய அதிகாரிகள் அது எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






