சமையலறையில் படுத்துறங்கிய சிறுத்தை..!
வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை சமையலறையில் படுத்துறங்கிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை மூன்று பேரை தாக்கியுள்ளது. தொடர்ந்து அங்குள்ள வீட்டிற்குள் புகுந்து சமையலறையில் ஓய்வு எடுத்துள்ளது.
இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நான்கு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்துள்ளனர்.






