ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு கண்புரை அறுவை சிகிச்சை..!
ஜனாதிபதி திரௌபதி முர்மு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி மாநிலங்களுக்கான முதல் அரசு முறை பயணமாக கடந்த 12ஆம் தேதி திரிபுரா, அசாம் சென்றிருந்தார்.
இது குறித்து ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் ஜனாதிபதிக்கு நேற்று கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது எனவும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





