--- --:--:-- --

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்ட சம்பவம்..!

9

த்திரப்பிரதேசத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத. உத்தரபிரதேச மாநிலம் நாசிக்கை கிராமத்தை சேர்ந்த ஒரு மாணவி தனது தாய் தந்தை வேலை நிமித்தமாக வெளியூர் சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

 

வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டு உடலை அவரது வீட்டில் தூக்கில் தொங்க விட்டு செல்வதாக கூறப்படுகிறது.

 

பாதிக்கப்பட்ட பெண்ணின் இளைய சகோதரி பயிற்சி வகுப்பு முடிந்து வீட்டிற்கு திரும்பிய பொழுது இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்து வந்த போலீசார் மாணவி உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon