உதவி ஆய்வாளரை மண்ணெண்ணையை ஊற்றிக் கொளுத்த முயன்ற ரவுடியின் தாய்..!
சென்னை அமைந்தகரையில் உதவி ஆய்வாளர் மீது மண்ணெண்ணையை ஊற்றிக் கொளுத்த முயன்ற ரவுடியின் தாயை போலீசார் கைது செய்தனர். அவர் தலைமறைவாக இருந்த நிலையில் உதவி ஆய்வாளர் தலைமையில் 4 பேர் கொண்ட போலீசார் அவரை பிடிக்க அரும்பாக்கம் சென்றனர்.
அங்கிருந்து தப்பி ஓடிய வினோத் தன் வீட்டிற்குள் நுழைந்தபோது அங்கு வந்த போலீசாரை தடுத்து நிறுத்திய அவரது தாய் மண்ணெண்ணையை உதவி ஆய்வாளர் மீது ஊற்றி கொழுத்தி விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வினோத் அங்கிருந்து தப்பினார். இதனையடுத்து காவலரின் மீது தண்ணீர் ஊற்றி மீட்டதுடன் வினோத்தின் தாயாரை போலீசார் கைது செய்தனர்.





