நடுரோட்டில் காரை நிறுத்தி புகைப்படம் எடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்..!
தென்னிந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தற்போது மாமன்னன் திரைப்படம் உருவாகி வருகிறது.இப்படம் மட்டுமின்றி ஜெயம் ரவி நடிப்பில் புதிதாக உருவாகவுள்ள படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் கமிட்டாகியுள்ளார்.
இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ள கீர்த்தி, தற்போது நடுரோட்டில் காரை நிறுத்தி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
அதுவும் தனது செல்ல பரணியுடன் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




