முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனைவிக்கு கொரோனா..!
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவியாளர் உட்பட இருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் எடப்பாடிபழனிசாமியின் மனைவி பரிசோதனை மேற்கொண்டார்.
அவருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அறிகுறிகள் எதுவும் இல்லாத சூழலில் அவர் தன்னைதானே வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். மேலும் அவர் தொடர்ந்து தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார்.






