இங்கிலாந்தில் இருந்து கர்நாடகா வந்த 50 பயணிகள்..!
இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டு பயணிகளை கண்டறிந்து அவர்களுக்கு புதிய வகை தொற்று பரவி உள்ளதா என மரபணு பரிசோதனை நடத்தி வரும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கர்நாடகாவுக்கு வந்து ஐம்பது பயணிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்துள்ளனர்.
கர்நாடக அரசு இவர்களை கண்டுபிடிக்க காவல் துறையின் பல்வேறு பிரிவுகளை அமைத்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் தாமாக முன்வந்து தங்கள் பெயர் விவரங்களை பதிவு செய்ய கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு வராத 50 பேரின் இருப்பிடம் தேடப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 197 பேரை தேடி கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.







