கண்காட்சியில் ராட்டினம் உடைந்து 5 பேர் காயம்..!
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற்ற கண்காட்சியில் ராட்டினத்தில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். காசியாபாத்தில் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற கண்காட்சியில் பெண்கள் உட்பட 10 பேர் ராட்டினத்தில் விளையாடினார்.
அப்போது திடீரென அதன் ஒரு பகுதி உடைந்ததில் அதில் பயணம் செய்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர்.





