16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. 5 பேருக்கு தூக்கு தண்டனை..!
சதீஸ்கரில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததுடன் அந்த பெண்ணின் தந்தை உட்பட மேலும் இருவரை கொலை செய்த வழக்கில் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 16 வயது சிறுமியை 2021ல் 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
பின்னர் கல்லால் தாக்கிக்கொண்டு சிறுமியின் உடலை அருகில் உள்ள வனப்பகுதியில் வீசியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற சிறுமியின் தந்தை மற்றும் அவரது பேத்தியையும் அவர்கள் கொடூரமாக கொலை செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம், ஐந்து பேருக்கு தூக்கு தண்டனையும் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் சேர்த்து உத்தரவிட்டது.





