நடிகர் விஷாலின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் 45 லட்சம் ரூபாய் மோசடி..!
நடிகர் விஷாலின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் 45 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் கணக்காளர் உள்ளிட்ட 3 பேரையும் முன் ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கணக்காளர் ரம்யா, அவரது கணவர், சகோதரர் உட்பட பலருக்கு இதில் தொடர்பு இருப்பதால் அவர்கள் மூன்று பேருக்கும் முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மூவரையும் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.






