3 நாள்கள் தொடர் விடுமுறை..!
ஆடிப்பூரத்தையொட்டி வரும் 28-ம் தேதி(திங்கள்கிழமை) செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். இதனால், அந்த மாவட்டத்தில் 26, 27, 28 ஆகிய 3 நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறையாகும்.
அதேபோல், வரும் 23-ம் தேதி(புதன்கிழமை) அரியலூர் மாவட்டத்திற்கும், 24-ம் தேதி கன்னியாகுமரி(வியாழக்கிழமை) மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.






