திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 277 பேருக்கு கொரொனா தொற்று..!
தமிழகம் முழுவதும் கொரொனா பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 277 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் தற்போது கோவை மற்றும் திருப்பூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரொனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக அரசு தனிமனித இடைவெளி மற்றும் முக கவசம் அணிதால், சானிடைசர் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரொனா இரண்டாவது அலை வேகமாக பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.






