பயிர்கடன் முழு தள்ளுபடி வேண்டும் – சட்டப்பேரவையில் வலியுறுத்தல்
எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் நிதிநிலை அறிக்கையில் இல்லை. வெறும் கையில் முழம் போடுவது கஷ்டம் தான். விவசாயத்திற்கு 14,000 கோடி மட்டும் ஏன்? உணவு அளிப்பவர்களுக்கு ஏன் இவ்வளவு குறைவான நிதி. பயிர்கடன் முழு தள்ளுபடி என்ற அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இல்லாதது ஏமாற்றமாக உள்ளது.
மாற்றம் என்று சொல்லிக்கொண்டு தான் ஆட்சிக்கு வந்துள்ளார்கள். மாற்றத்தை கொடுப்பது மிகப்பெரிய சிக்கல். எனக்கு அது தெரியும். சமூக நீதி கணக்கெடுப்பு என்ற அறிவிப்பு வெளியிட்டீர்கள். அதற்கு பட்ஜெட்டில் ஒதுக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் – சௌமியா அன்புமணி
📱 Share on WhatsApp 𝕏 Share on X




