செய்ன் கோபின், ரெனால்ட் நிசான் ஆலைகளுக்குச் செல்கிறார் முதல்வர் விஜய்..!
தொழில்துறை வளர்ச்சி மற்றும் புதிய முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளின் பகுதியாக, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (ஆகஸ்ட் 3) ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் தொழில் நிறுவனப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார்.
இன்று மதியம் 3 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் அமைந்துள்ள பிரபல கண்ணாடியிழை உற்பத்தி நிறுவனமான ‘செயின் கோபின்’ (Saint-Gobain) ஆலை மற்றும் அதனைத் தொடர்ந்து ரெனால்ட்-நிசான் (Renault-Nissan) உள்ளிட்ட முன்னணி வாகன உற்பத்தி ஆலைகளில் முதலமைச்சர் ஆய்வு நடத்துகிறார்.
மேலும், மாம்பாக்கத்தில் உள்ள சிப்காட் (SIPCOT) திட்ட அலுவலகத்தைப் பார்வையிட்டு, அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சிப் பணிகளையும் அவர் நேரில் கேட்டறிய உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




