தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழல்; கர்நாடகா எப்படித் தண்ணீர் திறக்க முடியும்?’ பா.ஜ.க கேள்வி
கர்நாடக மாநில பா.ஜ.க தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, தமிழகத்திற்குக் காவிரி நீர் திறந்துவிடுவதற்கு வெள்ளிக்கிழமை எதிர்ப்புத் தெரிவித்தார். கர்நாடக மாநிலமே கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வரும் நிலையில், தங்கள் மாநில விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இது குறித்து மைசூருவில் அவர் பேசுகையில், “கர்நாடகாவில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் தமிழகத்திற்கு நம்மால் எவ்வாறு தண்ணீரைத் திறக்க முடியும்? நமது விவசாயிகளின் நலன்கள் கண்டிப்பாகப் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




