--- --:--:-- --

நீட்டை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது – மத்திய அரசை வலியுறுத்திய ஸ்டாலின்

9

டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய நேரம் இதுதான்.

 

 

டெல்லியில் மாணவர்கள் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டங்களுக்குப் பிறகாவது மத்திய அரசு விழிப்படைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வு அனைத்து அளவுகோல்களிலும் தோல்வியடைந்துள்ளது. பள்ளிக் கல்வியை மையமாகக் கொண்டு மாணவர்களின் திறனை மதிப்பிட வேண்டிய நிலையில், கற்றலின் மையமாக இருந்த பள்ளிகளை பயிற்சி மையங்களாக மாற்றியிருக்கிறது.

 

 

இதனால் சம வாய்ப்பு பாதிக்கப்பட்டு, சமூகநீதிக்கும் கல்வி சமத்துவத்துக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon