தமிழகம் முழுவதும் உஷார் நிலை..!
டெல்லியில் கார் குண்டு வெடித்ததை அடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தி உள்ளனர். தமிழக எல்லைகள், சோதனை சாவடிகளில் வாகன சோதனைகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு, ரோந்து பணி, சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக சென்னையில் ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




