நாளை 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் அமுதா அளித்த தகவலின்படி, நாளை (அக்டோபர் 20) தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 11 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது ஒரே நேரத்தில் 2 கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக அடுத்த 6 நாட்களுக்குத் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




