பாகிஸ்தான் ராணுவத்தில் பெரும் உயிர் சேதம்: வியோமிகா

ந்தியா நடத்தியத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு இருப்பதாக பெண் விமானப்படை அதிகாரி வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தானிலுள்ள 4 வான்பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து இந்தியா ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறினார். இதில் பாகிஸ்தானின் ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.