மத போதகர் ஜான் ஜெபராஜ் ஜாமீன் மனு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவு

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட கிறிஸ்தவ மத போதகர் ஜாமீன் கோரிய மனுவிற்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிறிஸ்தவ மத பாடல்கள் மூலம் சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமான மதபோதகராக இருப்பவர் ஜான் ஜெபராஜ்.

 

இவர் கோவையில் கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடம் என்ற அமைப்பை நிறுவி அதில் மதபோதகராகவும் செயல்பட்டு வருகிறார். கடந்த 2024-ம் ஆண்டு மே 21-ம் தேதி மத போதகர் ஜான் ஜெபராஜ், கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில், 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.

 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நீதிபதி விக்டோரியா கெளரி முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தார்.