தாம்பரம்-திருச்சி இடையே நாளை முதல் சிறப்பு ரயில்

கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம் – திருச்சி இடையே நாளை (ஏப்ரல் 29) முதல் ஜூன் 29-ஆம் தேதிவரை இருமார்க்கத்திலும் வாரத்தில் 5 நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, திருச்சியில் இருந்து அதிகாலை 5:35 மணிக்கு புறப்பரம் ரயில், மதியம் 12:30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து மதியம் 3:45 மணிக்கு புறப்படும் ரயில், திருச்சிக்கு இரவு 10:40 மணிக்கு சென்றடையும்.